மகாராஷ்டிராவில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை
Jun 25 2016 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மாநிலத்தில், உள்ள உயிரியல் பூங்காவில், வெள்ளை புலி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் Aurangabad நகரில் அமைந்துள்ள Siddharth உயிரியல் பூங்காவிற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவிலிருந்து வெள்ளை புலி கொண்டுவரப்பட்டது. போதிய உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கி, புலி பராமரிக்கப்பட்டு வந்தது. கீதா எனப் பெயரிடப்பட்ட இந்த அரிய வகை வெள்ளை புலி, இன்று மர்மமான முறையில் இறந்தது. இதுதொடர்பாக, பூங்கா நிர்வாகிகளிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.