சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த தமிழக பெண்ணின் கை வெட்டப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்
Oct 9 2015 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த தமிழக பெண்ணின் கை வெட்டப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் வீட்டு வேலை செய்வதற்காக 2 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு சென்றார். வீட்டு உரிமையாளர் கஸ்தூரியை கொடுமைப் படுத்தியதால், அதுகுறித்து அதிகாரிகளிடம் அவர் புகார் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதலாளி கஸ்தூரியின் வலது கையை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த கஸ்தூரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் திருமதி.சுஷ்மாஸ்வராஜ், சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், கஸ்தூரிக்கு தேவையான உதவிகளை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.