ஹஜ் புனிதப் பயணத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 101-ஆக உயர்வு
Oct 9 2015 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹஜ் புனிதப் பயணத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 101-ஆக உயர்ந்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஏராளமானோர் சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு சென்றனர். அங்கு, மினா நகரில் கடந்த மாதம் 24-ம் தேதி சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், இந்தியர்கள் உட்பட 769 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளதாக சவூதி அரேபியாவில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.