ஜம்மு - காஷ்மீரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மாட்டிறைச்சி விவகாரம் : வீண் வதந்திகளை தடுக்க மாநிலம் முழுவதும் மொபைல் இணையதள சேவைக்கு சில மணி நேரங்கள் தடை
Oct 9 2015 8:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீண் வதந்திகளை தடுக்க அம்மாநிலம் முழுவதும் மொபைல் இணையதள சேவைக்கு சில மணி நேரங்கள் தடை விதிக்கப்பட்டது.
காஷ்மீரில் எம்.எல்.ஏக்கள் விடுதியில், சுயேட்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ரஷித் என்பவர் மாட்டிறைச்சி விருந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து சட்டசபையில் பிரச்னை எழுந்தபோது, விருந்து கொடுத்ததாகக் கூறப்படும் சுயேட்சை எம்.எல்.ஏவை, சில எம்.எல்.ஏக்கள் சூழ்ந்து தாக்கினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வீண் வதந்திகளை தடுக்க ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் மொபைல் இணையதள சேவைக்கு சில மணி நேரங்கள் தடை விதிக்கப்பட்டது. தற்போது, நிலைமை கட்டுக்குள் இருப்பதால் இணையதள தடை நீக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.