பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பலியான காவல்துறை கண்காணிப்பாளர் பல்ஜித்சிங்கின் மகனுக்கு துணை கண்காணிப்பாளர் பதவி வழங்கி அரசு உத்தரவு
Jul 31 2015 7:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பலியான காவல்துறை கண்காணிப்பாளர் பல்ஜித்சிங்கின் மகனுக்கு துணை கண்காணிப்பாளர் பதவி வழங்கி பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் தினா நகரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் குர்தாஸ்பூர் மாவட்ட புலனாய்வுப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பல்ஜித் சிங் கொல்லப்பட்டார். இவர் தனது தந்தையின் மறைவையடுத்து, கடந்த 1985-ம் ஆண்டு காவல்துறையில் துணை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக, பல்ஜித் சிங்கின் தந்தை 1984-ம் ஆண்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையைப் போலவே பல்ஜித் சிங்கும் அண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானார். இதனையடுத்து, பல்ஜித் சிங்கின் மகனை காவல்துறை துணை கண்காணிப்பாளராக பஞ்சாப் அரசு நியமித்துள்ளது.