மக்களவைத் தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த பாஜக திட்டம்... 255 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்
Jan 12 2024 9:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவைத் தேர்தலில், பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 543 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மக்களவை தேர்தலில் 255 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.