சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் ஜாமீன் மனு : 6 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
Jan 11 2024 7:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு மேலும் 6 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை எற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் ஜாமீனை நீட்டிக்ககோரி நவாப் மாலிக் தரப்பில் முறையிட்ட நிலையில், அவருக்கு மருத்துவ ஜாமின் மேலும் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.