வெளிநாடு செல்ல முயன்ற அபிஷேக் பானர்ஜியின் மனைவி தடுத்து நிறுத்தம் : கொல்கத்தா விமான நிலையத்தில் ருஜிரா பானர்ஜியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
Jun 6 2023 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாடு செல்ல முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நிலக்கரி ஊழல் வழக்கில் அபிஷேக் பானர்ஜி மீது வழக்கு போடப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அவரது மனைவி ருஜிரா பானர்ஜியும் சேர்க்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற அனுமதியுடன் ஏற்கனவே அபிஷேக் பானர்ஜி, ருஜிரா பானர்ஜியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ருஜிரா பானர்ஜி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், குழந்தைகளுடன் வெளிநாடு செல்ல முயன்ற ருஜிரா பானர்ஜியை , கொல்கத்தா விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.