வரும் வாரங்களில் வெப்பநிலை பெருமளவு அதிகரிக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Mar 28 2023 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் வாரங்களில் மனிதர்கள் உயிர் வாழும் வரம்பை நெருங்கும் அளவிற்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 1901-ம் ஆண்டுக்குப் பின் பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் இது அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகமாகும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளது. இது பரவலான பயிர் சேதம் பல மணி நேர மின்தடையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.