கர்நாடகாவில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. மடல் விருபாஷப்பா கைது
Mar 28 2023 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் 40 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. மடல் விருபாஷப்பா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னகிரி தொகுதி எம்.எல்.ஏவான விருபாஷப்பா மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவரது மகன் பிரசாந்த் பெங்களூருவில் குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் மைசூரு சாண்டல் சோப்பு நிறுவனத்திற்கு ரசாயனம் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக பிரசாந்த் 40 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.