ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் : தேதிகளை அறிந்து சேவைகளைப் பெற அறிவுறுத்தல்
Mar 27 2023 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த மாதம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பண்டிகைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக வங்கிகள் திறக்கப்படாது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் பாதி நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, அம்பேத்கர் ஜெயந்தி, ஆண்டு நிறைவு போன்ற விடுமுறைகளுடன் சனி-ஞாயிறு வார விடுமுறையும் சேர்த்து 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. வங்கிகள் வேலை செய்யாத நாட்களில் கூட, ஆன்லைன் நிதிச் சேவைகள் வழக்கம் போல் செயல்படும். மாதத்தில் பாதி நாள் விடுமுறை இருப்பதால் வாடிக்கையாளர்கள், அந்த நாட்களை குறித்து வைத்து பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.