நீதித்துறையை மக்கள் அணுகும் நிலைமாறி நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு
Nov 26 2022 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீதித்துறையை மக்கள் அணுகும் நிலைமாறி, நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன தினத்தையொட்டி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், சட்டத்துறையில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூக மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். சட்டங்கள் மூலம் சமத்துவத்தை நிலைநாட்ட விளிம்புநிலை மக்களே காரணம் என்று தெரிவித்தார். சட்டத் தொழிலில் விளிம்புநிலை சமூகம் மற்றும் பெண்களை மேம்படுத்துவது முக்கியம் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.