வளைவுகளில் செல்லும் போது சாய்ந்து செல்லும் ரயில்கள் விரைவில் தயாரிக்கப்படும் : இந்திய ரயில்வே அறிவிப்பு
Nov 26 2022 10:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வளைவுகளில் திரும்பும் போது லேசாக சாய்ந்து செல்லும் ரயில்களை அடுத்து வரும் ஆண்டுகளில் தயாரிக்கவுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 220 கிலோ மீட்டராக அதிகரிக்க வேண்டுமென்றால் இது போன்ற தொழில்நுட்பம் மிகவும் அவசியம் எனத் தெரிவித்துள்ள ரயில்வே, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஏற்கெனவே இந்த வகை ரயில்கள் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது போன்ற ரயில்களை 2026ம் ஆண்டுக்குப் பின் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.