காங்கிரஸ் ஆதரவுடன் தொடர்ச்சியாக மதவாத வன்முறை அரங்கேற்றப்பட்டது : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
Nov 26 2022 10:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் ஆதரவுடன் குஜராத்தில் தொடர்ச்சியாக மதவாத வன்முறை அரங்கேற்றப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் கேடா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2002-ம் ஆண்டிற்கு பிறகு பாஜக எடுத்த நடவடிக்கைகளால் மாநிலத்தில் அமைதி திரும்பியதாக நினைவு கூர்ந்தார். கடந்த 22 ஆண்டுகளாக அமைதி நிலவுவதாக குறிப்பிட்ட அவர், 1995 ஆம் ஆண்டுக்கு முன் குஜராத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை வலுப்படுத்துவதற்காக மக்களை துண்டாடி ஜாதி, மத மோதல்களை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார். இதன் மூலம் பெரும்பான்மை சமூகத்துக்கு அநீதி இழைத்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். குஜராத்தில் கோத்ராவில் நடைபெற்ற ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்ட பின்னர் நேரிட்ட வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.