கர்நாடகத்தில் சாலையில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து : தட்டிக்கேட்ட நபர் மீது சரமாரியாக தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்
Nov 26 2022 10:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே எலஹங்கா பகுதியில் சாலையில் அதிவேகமாக சென்றதை கண்டித்த பைக்கில் சென்றவரை அரசு பேருந்து ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன் மாலை எலஹங்காவில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் சந்தீப். அப்போது அரசு பேருந்து ஒன்று முன்னால் சென்ற பேருந்தை முந்திச்செல்ல முயன்றது. சாலையில் இரு பேருந்துகளின் ரேஸை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தீப், அரசு பேருந்து ஓட்டுநரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் சந்தீப்பை பேருந்தில் ஏற்றி பயணிகள் முன்னிலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.