காரைக்காலில் காலராவை கட்டுப்படுத்த நடவடிக்கை -தமிழிசை சௌந்தர்ராஜன்
Jul 6 2022 2:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்காலில் காலராவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி நடைபெற்ற மகாபிஷேகத்தில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காரைக்காலில் காலராவை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்தார்.