அனைத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் ஆதார் அட்டை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
May 20 2022 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடெங்கும் உள்ள அனைத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு அரசின் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ், பி.ஆர் கவாய் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, பாலியல் தொழிலாளர்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.