காச நோயை கண்டறியும் தோல் பரிசோதனைக்கு மத்திய அரசு ஒப்புதல்
May 20 2022 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காச நோயை கண்டறியும் தோல் பரிசோதனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில், காசநோய் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காசநோயை கண்டறியும் தோல் பரிசோதனை ஒன்றை இந்தியா உருவாக்கி உள்ளதாகவும், சி-டிபி என அழைக்கப்படும் இச்சோதனை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.