இந்தியாவின் சட்ட விதிகளை ஏற்க விரும்பாத இணைய சேவை நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் -ராஜிவ் சந்திரசேகர்
May 20 2022 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் சட்ட விதிகளை ஏற்க விரும்பாத இணைய சேவை நிறுவனங்கள், நாட்டை விட்டு வெளியேறலாம் என்று, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் திரு. ராஜிவ் சந்திரசேகர், எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையத்தில் தகவல்களை சேமிக்காத நிறுவனங்கள், உடனடியாக தகவல்களை சேமிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ள அவர், அரசு கேட்கும் தகவல்களை உடனடியாக தர வேண்டும் என்றும், இணைய விதிமீறல்கள் குறித்து தெரியப்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.