கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை திட்டம் தொடக்கம் ஆந்திராவில் அறிமுகம்
May 20 2022 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கால்நடைகளை ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் புதிய திட்டம், ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் ஒய்.எஸ்.ஆர். கால்நடை ஆம்புலன்ஸ் சேவை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை, அமராவதியில், ஆந்திர முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி, நேற்று தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவைக்கு 1962 எனும் இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு தொகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவை ஈடுபடுத்தப்படும் என்றும், படிப்படியாக மாநிலம் முழுவதும் அதிகரிக்கப்படும் எனவும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.