ஊழல் வழக்‍கு தொடர்பாக பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வீடுகளில் மீண்டும் சோதனை - பல மணிநேரமாக நடைபெறும் சோதனையில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு பங்கேற்பு

May 20 2022 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு வழக்‍கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் திரு. லாலு பிரசாத் யாதவ் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான திரு.லாலு பிரசாத் யாதவ், முதல்வராக இருந்த சமயத்தில் கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் என பல்வேறு ஊழல் வழக்‍குகளில் குற்றம் நிரூபிக்‍கப்பட்டு, பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்‍கப்பட்டு, சிறையில் அடைக்‍கப்பட்டார்.

இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 2004ம் ஆண்டு திரு. லாலுபிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.அப்போது ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ரெயில்வே வேலை பெற முயற்சித்தவர்களிடம் இருந்து அவர் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய லஞ்ச வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். திரு. லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி மீதும் போலீசார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, புதிய வழக்கு தொடர்பாக லாலுபிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பீகாரில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீடு, அவரது மகள் வீடு ஆகிய இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00