கேரளாவில் பெய்த கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு : வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் தவிப்பு
May 20 2022 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் கொச்சியில் பெய்த கனமழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் நிரம்பி வருகின்றன. குறிப்பாக கொச்சியில் இடைவிடாது பெய்த கனமழையால் வீடுகள், கடைகள், தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளார். உடைமைகளை இழந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.