ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் கைது - லஷ்கர்-இ-தொய்பா ஆதரவாளரர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை
May 19 2022 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் தாக்குதல் நடத்த முயன்ற 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இதனையடுத்து, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர். இதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்திய பாதுகாப்புப் படையினர், தாக்குதல் நடத்த முயன்ற 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேரை அதிகரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 பிஸ்டல்கள், 23 எறிகுண்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் அங்கு நடைபெறவிருந்த தீவிரவாத தாக்குதல் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக காஷ்மீர் ஐஜிபி தெரிவித்தார்.