குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று - ஒரு வாரம் தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்
Jan 24 2022 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரகுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒரு வாரத்திற்கு தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடுவுக்கு, கடந்த டிசம்பர் மாதம் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா கண்டறியப்பட்டிருப்பதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அத்துடன் வெங்கையா நாயுடு மனைவிக்கு கொரோனா இல்லை என்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், திரு. வெங்கையா நாயுடுவின் உடலில் சில அறிகுறிகள் காணப்பட்டதல், ஹைதராபாத் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் ஒருவாரம் தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் திரு. திரு. வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.