மத்திய பாஜக அரசு தொடக்கத்திலிருந்தே, மக்களின் உரிமைகளை பறித்து வருகிறது : காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றச்சாட்டு
Jan 23 2022 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பாஜக அரசு தொடக்கத்திலிருந்தே, மக்களின் உரிமைகளை பறித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல்காந்தி, இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அடிப்படை உரிமைகள் இல்லாத ஒரு ஜனநாயக நாடு இருந்து என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தொடக்கத்திலிருந்தே மக்களின் உரிமைகளை பறித்து வருகிறது என்றும், அடிப்படை உரிமைகள் அழிக்கப்பட்ட இந்தியாவை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். அரசாங்கத்திடம் கேள்வி கேட்கவும் மக்களுக்கு உரிமை உள்ளது, ஆர்டிஐ போன்ற உரிமைச்சட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான்- ஆனால் பாஜக அரசு எப்போதும், மக்களின் உரிமைகளை பறிப்பதிலேயே முனைப்புடன் இருக்கிறது என்றும் திரு.ராகுல்காந்தி தெரிவித்தார்.