புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் பொது இடங்களுக்கு வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - அம்மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை
Dec 5 2021 11:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் பொது இடங்களுக்கு வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சுகாதாரத்துறை இயக்குனர் திரு.ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின்கீழ், கட்டாய தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்படுவதாகவும், இதையும் மீறி பொது இடங்களுக்கு வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.