கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை : 4 பேர் கைது - போலீசார் விசாரணை
Dec 3 2021 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவள்ளா தாலுகா பிரிங்கரா பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார். 34 வயதான அவர் பிரிங்கரா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயலாளராக செயல்பட்டு வந்தார். இதனிடையே நேற்று இரவு திருவள்ளாவில் உள்ள சேத்தன்ஹரி பகுதியில் சந்தீப் குமார் வந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். சந்தீப் குமார் கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டிய சூழலில், 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த அரசியல்கட்சி பிரமுகர்கள் கொலை சம்பவம் தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.