நடிகை ஷெர்லின் சோப்ரா மீது நடிகை ஷில்பா ஷெட்டி மான நஷ்ட வழக்கு
Oct 19 2021 6:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்தரா இருவரும், நடிகை ஷெர்லின் சோப்ரா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர். ஷெர்லின் சோப்ரா தங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள், எந்த ஆதாரமும் இல்லாதவை என்றும், பணம் பறிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஷெர்லின் சோப்ராவிடமிருந்து 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடும் கேட்டுள்ளனர். ஆபாச படங்கள் தயாரித்து வெளியிட்டது தொடர்பான விவராகத்தில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்தரா மீது, நடிகை ஷெர்லின் மீண்டும் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.