புதுச்சேரி: தொழிற்சாலை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருட்டு
Oct 19 2021 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் தனியார் கண்ணாடி தொழிற்சாலை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆஷிக் தனது இரு சக்கர வாகனத்தை தொழிற்சாலை வாசலில் நிறுத்தியுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.