நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக ஒன்றிணைந்து பாடுபடுவோம் - மிலாது நபியையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
Oct 19 2021 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களிலிருந்து உத்வேகம் பெற்று, சமூகத்தின் செழிப்பு, நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்குப் பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், நியாயம், மனிதநேயம் கொண்ட இணக்கமான சமூகத்தை உருவாக்க நபிகள் நாயகத்தின் நிலைத்த போதனைகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று கூறியுள்ளார்.
மிலாது நபியையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டுமக்களிடம் அமைதி, செழிப்பு, கருணை, சகோதரத்துவம் நிலைத்திருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.