புதிய உச்சத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் - சென்செக்ஸ், இதுவரை இல்லாத அளவாக 62 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது
Oct 19 2021 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை புதிய உச்சத்துடன் தொடங்கின. சென்செக்ஸ், இதுவரை இல்லாத அளவாக 62 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 391 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத அளவாக 62 ஆயிரத்து 156 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 127 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 604 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாயாக இருந்தது.