மும்பையில் ஓடும் ரயிலில் நடைமேடையில் தவறி விழுந்த கர்ப்பிணி : ரயில்வே காவலர், பொதுமக்கள் விரைந்து மீட்பு
Oct 19 2021 10:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணி பெண், நடைமேடையில் தவறி விழுந்தபோது அவரை, ரயில்வே பாதுகாப்பு படை வீரர் விரைந்து சென்று காப்பாற்றினார். கர்ப்பிணி பெண், நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்காமல் இருக்க, பொதுமக்களும், ரயில்வே போலீசுடன் இணைந்து விரைவாக செயல்பட்டனர். ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் இந்த பரபரப்புக்காட்சிகள் பதிவாகியுள்ளன.