பாரத் பெட்ரோலியம், இந்திய கப்பல் கழகம், ஐ.டி.பி.ஐ வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டுக்குள் தனியார்மயமாக்க திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு
Oct 19 2021 10:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரத் பெட்ரோலியம், இந்திய கப்பல் கழகம், ஐ.டி.பி.ஐ வங்கி, பி.இ.எம்.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை, நடப்பு நிதியாண்டுக்குள் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தனியார்மயமாக்கப்பட உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளிட்ட சொத்துக்களை பணமாக்குவதற்காக, தனி நிறுவனத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனத்துக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, பொது நிறுவனங்கள் துறையின் கீழ், அந்த நிறுவனம் செயல்படும் என, முதலீட்டு-பொது சொத்துக்கள் மேலாண்மை துறை செயலாளர் தெரிவித்தார்.