எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை சந்திக்கும் இந்தியா - சீனாவால் நாடு புதிய போர் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சனம்
Sep 22 2021 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா, தனது எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை சந்தித்து வருவதாகவும், சீன எல்லையில் புதிய போர் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லடாக், உத்தரகண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய இந்திய எல்லையையொட்டிய பகுதிகளில் சீனா 10 புதிய ராணுவத் தளங்களை அமைத்து வருவதாக ஊடகம் ஒன்றில் அண்மையில் செய்தி வெளியானது. இதனை சுட்டிக்காட்டி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள திரு. ராகுல் காந்தி, இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக இந்தியா புதிய போர் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், ஆனால் சீனாவின் நடவடிக்கைகளை மத்திய அரசு அட்சியப்படுத்துவதாகவும், இது நாட்டிற்கு நல்லதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.