இந்தியாவில் 4 லட்சத்து 20 ஆயிரத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் பலி
Jul 24 2021 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் பலியாகினர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 97 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 32 ஆயிரத்து 159-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 16-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 4 லட்சத்து 8 ஆயிரத்து 977 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 3 கோடியே 5 லட்சத்து 3 ஆயிரத்து 166 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்து 87 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.