கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தொடங்கியது - 3 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்த நடவடிக்‍கை

Jul 24 2021 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரு நாட்களும் நாள்தோறும் 3 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்த நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் கட்டுக்‍குள் வராமல் உள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பரவல் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 18 ஆயிரம் பேருக்‍கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 132 பேர் கொரோனாவுக்‍கு பலியாகிவுள்ளனர்.

இதையடுத்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அம்மாநிலம் முழுவதும், முழு ஊரடங்கு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்றும், நாளையும், பிரம்மாண்ட கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்த கேரள சுகாதாரத்துறை நடவடிக்‍கை எடுத்துள்ளது. நாள் ஒன்றுக்‍கு 3 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00