நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை : மக்களவையில் மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அறிவிப்பு
Jul 24 2021 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமென, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி. பாரதி பிரவீன் பவார், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா 3-ம் அலை பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், பதிலளித்தார். கொரோனா 3-வது அலை அச்சுறுத்தலால் நீட் மற்றும் பிற பொது தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என்றும், நடப்பாண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்தார்.