மகாராஷ்டிராவில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : ராய்கட் மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு - 36 பேர் பலி

Jul 23 2021 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 30-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் முதல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராய்காட் மாவட்டத்தில் உள்ள Mahad பகுதிகளில் பெய்த கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவில் 36 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மாயமான 30-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் குழுவினர், கடற்படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே Satara மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இதுதவிர Ratnagiri, Sindhudurg, Kolhapur ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00