டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு : புதிய நோயாளிகள் சேர்க்கையை நிறுத்தி வைத்த மருத்துவமனைகள் - நோயாளிகள் அதிர்ச்சி
Apr 22 2021 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, பல மருத்துவமனைகள் புதிய நோயாளிகள் அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால் நோயாளிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
டெல்லி, மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம் உள்பட நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க மத்திய அரசு சீரிய முயற்சி ஏதும் எடுக்கவில்லை. இதனால், டெல்லி, நொய்டா, Sehore, போபால் உள்ளிட்ட பல நகரங்களில் சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பு உள்ள மருத்துவமனைகளில் இருந்து, குறைந்த அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று, சமாளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு எதிரொலியாக, டெல்லி மற்றும் நொய்டாவில் பல தனியார் மருத்துவமனைகளில் புதிதாக கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் படுக்கைகள் இல்லை என்றும் மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.