சீதாராம் யெச்சூரி மகன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் - அகால மரணத்தால் வருந்துவதாக உருக்கம்

Apr 22 2021 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சீத்தாரம் யெச்சூரியின் மகன் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சீத்தாரம் யெச்சூரியின் மூத்த மகனான ஆஷிஷ் யெச்சூரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவலை திரு.யெச்சூரி உடனடியாக டுவிட்டரில் பதிவிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வரும் நிலையில், பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆஷிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டுவிட்டர் பதிவில், இந்த அகால மரணத்திற்கு மிகவும் வருந்துவதாகவும், இத்துயரமான தருணத்தில் திரு.யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00