பிரான்சில் இருந்து 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு பின் மேலும் 4 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை : இதுவரை இந்தியா வந்துள்ள விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Apr 22 2021 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐந்தாம் கட்டமாக பிரான்சில் இருந்து நான்கு ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன.
மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது. அதன்படி, இதுவரை 14 ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரான்சில் இருந்து ஐந்தாம் கட்டமாக நான்கு ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன. இதனை பிரான்ஸ் சென்றுள்ள இந்திய விமானப்படையின் தளபதி திரு. பதாரியா, மெரிக்னாக்-போர்டோ விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு பிறகு ரபேல் விமானங்கள் இந்தியா வந்ததாகவும், விமானங்களுக்கு வானில் எரிப்பொருள் நிரப்பும் பணியை பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு விமானப்படைகள் மேற்கொண்டதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.