புதுச்சேரியில் கல்லூரி மாணவியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்
Apr 21 2021 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அருகே, கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் சடலத்தை கட்டி வீசிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த ராமன் என்பவரின் மகள் ராஜஸ்ரீ, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, பொறையூர்பேட் பகுதியை சேர்ந்த ஒருவருடன் மாணவி சென்றதாக கூறப்படுகிறது. கஞ்சா பழக்கம் கொண்ட அந்த நபரும், அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து, மாணவியை துன்புறுத்தி கொன்று, சாக்கு மூட்டையில் கட்டி, சுடுகாட்டு பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர், வழக்கறிஞரை சந்தித்து தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டதன் மூலம், இந்த உண்மை தெரியவந்தது. மாணவியை கொலை செய்த 3 பேரை, போலீசார் அடையாளம் கண்டு, தேடி வருகின்றனர்.