இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாட்டம் - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை
Jan 25 2021 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் 72-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்.
நாட்டின் 72-வது குடியரசு தினம், நாளை கொண்டாடப்படுவதையொட்டி, டெல்லியில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது. குடியரசு தின அணிவகுப்பில் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் கலைஞர்களும் பங்கேற்கின்றனர். இந்நிலையில், குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவரின் உரை மாலை 7 மணி முதல் அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுவதுடன், அனைத்து தூர்தர்ஷன் சேனல்களில் இந்தியிலும் அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பப்படுகிறது. தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் மாநில மொழிகளிலும் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாக உள்ளது. இதேபோல், இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும் குடியரசுத் தலைவரின் உரை பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.