ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் : பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட வாக்குப்பதிவு
Nov 28 2020 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் இன்று தொடங்கியது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 234 பதவிகளுக்கும், 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 280 தொகுதிகளில், 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவையொட்டி, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இருந்தும் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. 11 மணி நிலவரப்படி, 22 புள்ளி ஒன்று இரண்டு சதவீத வாக்குகள் பதிவாகின.