பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி, மீண்டும் வெற்றி பெறும் - கருத்துக் கணிப்பில் புதிய தகவல்
Oct 21 2020 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி, மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் 28 முதல் நவம்பர் 7 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டு உள்ளது. ஆட்சியை பிடிக்க இரு கூட்டணிக் கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், Lokniti - CSDS என்ற நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பில், முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு. நிதிஷ்குமாரின் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், அதே நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 133 முதல் 143 இடங்கள் வரை வெல்லக்கூடும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான 5 கட்சிகளின் மெகா கூட்டணிக்கு 88 முதல் 98 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில், திரு. தேஜஸ்வி யாதவின் புகழ், முதலமைச்சர் நிதிஷ்குமாரை விட நான்கு சதவீதம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 வாக்காளர்களில் மூன்று பேர், திரு. நிதிஷ்குமாரை முதல்வராக விரும்புகிறார்கள் என்றும், 27 சதவீதம் பேர் திரு. தேஜஸ்வி யாதவை விரும்புகிறார்கள் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.