மகாராஷ்டிர ஆளுநர் பதவி விலக வேண்டும் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வலியுறுத்தல்
Oct 20 2020 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிர ஆளுநர் திரு.பகத் சிங் கோஷ்யாரி பதவி விலக வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு.சரத் பவார் வலியுறுத்தியுள்ளார். வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து, முதலமைச்சர் திரு.உத்தவ் தாக்கரேவிற்கு அவர் எழுதிய கடிதம் சர்ச்சையான நிலையில், "ஆளுநர் தனது வார்த்தைகளில்" கவனமாக இருந்திருக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா கருத்து தெரிவித்திருந்தார். இதனைக் குறிப்பிட்டு பதிலளித்துள்ள திரு.சரத் பவார், சுய மரியாதை உள்ள எவரும், இப்படிப்பட்ட விமர்சனத்திற்கு பின் பதவியில் இருக்க மாட்டார்கள் என விமர்சித்துள்ளார்.