வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கழுத்தில் காய்கறி மாலை, கையில் ஏர்க்கலப்பை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம்
Sep 28 2020 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வனவேங்கைகள் கட்சி சார்பில் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 30-க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் கழுத்தில் காய்கறி மாலையோடு, கையில் ஏர்க்கலப்பையை பிடித்தபடி, வாழை இலையை கையில் ஏந்தியவாறும் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென நடந்த இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது. போராட்டம் நடத்திய நபர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.