வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தீவிரமடையும் போராட்டம் - முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் கட்சியினருடன் அமர்ந்து போராட்டம்
Sep 28 2020 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் திரு.அமரீந்தர் சிங்கும் பங்கேற்றார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருப்பது விவசாயிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. விவசாயம் அதிகம் நடைபெறும் பஞ்சாபில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு கடுமையாக உள்ளது. அங்கு இடைவிடாமல் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காட்கர் கலன் அருகே உள்ள ஷாஹீத் பகத்சிங் நகர் பகுதியில், கட்சி தலைவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் திரு.அமரீந்தர் சிங் போராட்டம் நடத்தினார். முன்னதாக அவர், பகத்சிங்கின் பிறந்தநாளை யொட்டி அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.