புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்க ஏற்பாடு
Sep 28 2020 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை, அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 11 மணிமுதல், மதியம் 1 மணி வரை, 9489205308 என்ற எண்ணில் வாட்ஸ் அப் செயலி மூலமாக வீடியோ கால் அல்லது ஆடியோ கால் மூலம், முதுநிலைக்காவல் கண்காணிப்பாளருக்கு நேரடியாக தெரிவிக்கலாம். ஈ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.