முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு திவாலாகி விட்டது - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

Sep 28 2020 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக அரசு, 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதாகவும், முதலமைச்சர் திரு. எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு திவாலாகிவிட்டதாகவும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்‍கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான திரு. சித்தராமையா, கொரோனா சூழலிலும், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில், முதலமைச்சர் எடியூரப்பா அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். இக்‍கட்டான காலத்திலும் நடந்த இந்த முறைகேட்டை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என தெரிவித்தார். கர்நாடக மாநில அரசுக்கு தற்போது 4 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும், ஆண்டுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிகட்ட வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற சாத்தியமில்லை என்று தெரிவித்த திரு. சித்தராமையா, கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு திவாலாகிவிட்டதாக கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00